
காஞ்சிபுரம்: “ரயில் கட்டண உயர்வு என்பது தற்போது பரிசீலனையில் மட்டுமே உள்ளது, இன்னும் அமல்படுத்தப்படவில்லை,” என்று ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சோமண்ணா இன்று (ஜூன் 27) காஞ்சிபுரம் வந்தார். அவரை பாஜகவினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் வரவேற்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள புதிய ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். இந்த ரயில்நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.