
புதுடெல்லி: இமாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை பாதிப்பு, விபத்து காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. இமாச்சல பிரதேசத்தில் மணாலி, ஜீவா நல்லா, ஷிலாகர், ஸ்ட்ரோ, ஹோரன்கர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளின் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இமாச்சலின் தரம்சாலா பகுதி, கன்னியாரா கிராமத்தில் நீர்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 16 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.