
விழுப்புரம்: சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே கட்சிக்கும், ஆட்சிக்கும் கருணாநிதி தலைமை வகித்தபோது ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: என் மூச்சிருக்கும் வரை பாமக தலைவராக இருப்பேன். அவர் (அன்புமணி) செயல் தலைவராக இருப்பார். கட்சியின் வளர்ச்சிக்கு செயல் தலைவர் பொறுப்பு முக்கியமானது. ஆனால் அவர் செயல் தலைவர் பொறுப்பை ஏற்க மறுக்கிறார். ஏற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.