
சென்னை: 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஜூலை 1-ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரான அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சார திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடக்கமாக புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பிரத்யேக செயலியின் விவரங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பான திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடைபெற்றது.