• June 26, 2025
  • NewsEditor
  • 0

ச்விண்வெளியை இரண்டாவது இந்தியர் எட்டியிருக்கிறார். இன்னும் ஒரு சில மணிநேரத்தில், கால் பதித்துவிடுவார்.நேற்று மதியம் 12 மணியளவில், இந்தியாவை சேர்ந்த சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தனர்.

இந்த ராக்கெட்டின் விண்கலம் பெயர் டிராகன். ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட டிராகன் இன்று 4 மணியளவில் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது (Docking).

அடுத்ததாக, அழுத்தம், வெப்பநிலை போன்ற ஒரு சில சரிபார்ப்பிற்கு பிறகு, நான்கு பேர் கொண்ட குழு வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் கால் அடி எடுத்து வைத்தார்கள்.

விண்வெளியில் சுபன்ஷு சுக்லா

இவர்களின் இந்த விண்வெளி பயண நேரம் சுமார் 28 மணி நேரம் ஆகும். ஒரு மணிநேரத்திற்கு 478 கி.மீ வேகத்திற்கு இந்த விண்கலம் பயணித்தது.

சுபன்ஷு சுக்லாவின் குழு இன்னும் 14 நாள்களுக்கு விண்வெளியில் தங்கி, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

இத்துடன் சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்திலேயே பச்சை பயிர் மற்றும் வெந்தயம் வளர்க்கப்போகிறார். ஆக, விண்வெளியில் விவசாயம் செய்யப்போகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அடையப் போகிறார் இவர்.

இந்த விண்வெளி பயணத் திட்டத்தின் பெயர் ‘Axiom 4’.

கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளியை தொடுகிறார்.

டிராகன் விண்கலத்தின் டாக்கிங் வீடியோ இதோ…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *