• June 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும், மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளருமான எம்.ஜி.தாவூத் மியாகான், தங்களது கல்லூரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி பாபநாசம் தொகுதி எம்எல்ஏ-வான எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரான முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *