
புதுடெல்லி: உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக அமெரிக்காவின் பி-2 விமானம் கருதப்படுகிறது. மொத்தம் 172 அடி அகலம், 69 அடி நீளமுடைய இந்த விமானத்தை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. தொடர்ந்து 11,000 கி.மீ. வரை தரையிறங்காமல் பறக்கும். இந்த பி-2 ரகபோர் விமானங்கள் வேறு எந்த நாட்டிடமும் இல்லை, அந்தளவுக்கு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பி-2 ரக விமான வடிவமைப்பில் இந்தியர் ஒருவர் உதவி செய்து, பின்னர் உளவு பார்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார். ஈரான் மீது பி-2 விமானம் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது அவருடைய தகவல்கள் மீண்டும் வலம் வந்துள்ளன.
அதன் விவரம் வருமாறு:கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி மும்பையில் பிறந்தவர் நோஷிர் ஷெரியார்ஜி கவுடியா. பார்சி குடும்பத்தில் பிறந்த கவுடியா சிறு வயதிலேயே மிகவும் புத்திசாலியாக இருந்தார். தனது 15-வது வயதிலேயே பிஎச்.டி பட்டத்துக்கு நிகரான பட்டம் பெற்றுள்ளார். அதன்பிறகு 19-வது வயதில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.