
புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (ஜூன் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏர் இந்தியா விமானம் AI-171 துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) உடனடி விசாரணைக்காக, ஜூன் 13, 2025 அன்று பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி பலதுறை குழு அமைக்கப்பட்டது.