
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37,263 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 22,500 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
கேரளா, கர்நாடகவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.