
ஸ்ரீநகர்: அமர்நாத்தில் நடைபெற உள்ள பனிலிங்க தரிசன யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு பல் அடுக்கு பாதுகாப்பு அளிக்க காஷ்மீர் போலீஸ் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரிலுள்ள அமர்நாத்தில் இயற்கையாகவே உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிக்கும் யாத்திரை வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்கவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்துகொள்ளவுள்ளனர். பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இப்பகுதியில் கூடுதல் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.