
2026-ல் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. 18 வயதை எட்டியவர்கள் புதியதாக இந்தத் தேர்தலில் ஓட்டுப்போட உள்ளார்கள். அதற்கு கட்டாயம் வாக்காளர் அட்டை அவசியம் தானே.
அதை எப்படி ஈசியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்… வாங்க…
1. முதலில், voters.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் வலைதளத்திற்குள் செல்லவும்.
2. உங்களுடைய மொபைல் நம்பர், இ-மெயில் முகவரி (இது ஆப்ஷனல் தான்), கேப்சா ஆகியவற்றை சரியாக பதிவிட்டு கொள்ளவும்.
3. அடுத்ததாக வரும் பக்கத்தில், உங்களுடைய முதல் பெயர், கடைசி பெயர், பாஸ்வோர்டு, ‘Confirm Password’ கொடுக்கவும்.
(பாஸ்வோர்டில் குறைந்தபட்சம் ஒரு கேப்பிட்டள் லெட்டர், ஒரு ஸ்மால் லெட்டர், ஒரு நம்பர், ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருப்பது நல்லது)
4. ‘Request OTP’-ஐ கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ பதிவிட்டு கொள்ளவும்.
5. இப்போது நீங்கள் மேலே கொடுத்த தகவல்களை மீண்டும் கொடுத்து, ‘Log in’ செய்துகொள்ளுங்கள்.
6. ‘Fill Form 6’ கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் தகவல்களையும், ஆவணங்களையும் சரியாக பதிவிடுங்கள்.
7. அடுத்து, ‘Preview’ கொடுத்து, நீங்கள் ஃபில் செய்த தகவல்களில் எதாவது தவறு உள்ளதா என்பதை சரிபாருங்கள். எதாவது இருந்தால் உடனடியாக சரி செய்து, ‘Submit’ கொடுங்கள்.
அப்புறம் என்ன?அடுத்த 15 நாள்களில் உங்களது முகவரியை தேடி உங்களது வாக்காளர் அட்டை வந்துவிடும்.
இந்த 15 நாள்களில், உங்களுடைய வாக்காளர் அட்டை எந்த பிராசஸில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள, அதே கணக்கிற்குள் சென்று, ‘Track Application Status’ கொடுத்து தெரிந்துகொள்ளலாம்.