
வால்பாறை: வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வால்பாறையில் கடந்த 20-ம் தேதி பச்சைமலை எஸ்டேட்டின் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை, அங்கு இருந்த சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்த நிலையில் இன்று சிறுத்தை சிக்கியது.