
மேட்டுப்பாளையம்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்வதால், பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக உபரி நீர் இன்று (ஜூன் 26) பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பில்லூர் அணையின் நீர்த்தேக்க உயரம் 100 அடி. நீலகிரி மற்றும் கேரளா மலைக் காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதியாக பில்லூர் அணை கொண்டுள்ளது.