• June 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக ஊழியர்களின் குறைகளைக் களையவும், இடர்பாடுகளை ஆய்வு செய்யவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முதலில் மலைப் பிரதேசங்களிலும், அதன்பிறகு தமிழகம் முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுபானங்களை விற்கும்போது கூடுதலாக ரூ.10 வசூலித்து, காலி மதுபாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும்போது ரூ. 10-ஐ திருப்பி கொடுக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *