• June 26, 2025
  • NewsEditor
  • 0

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025-ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4′ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தின் முக்கிய பைலட்டாக இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியான சுபன்ஷு சுக்லா இருக்கிறார்.

இந்தியாவைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா மற்றும் அவரது மூன்று குழு உறுப்பினர்களுடன் இன்று (ஜூன் 25 ) ஏக்ஸ்-4 வெற்றிகரமாக விண்வெளியில் பாய்ந்தது.

தனது விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சுக்லா தனது அன்பு மனைவி கம்னாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு உணர்ச்சிகரமான குறிப்பை எழுதி இருக்கிறார்.

அதில், “ஜூன் 25ஆம் தேதி அதிகாலை நாங்கள் பூமியை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள நிலையில் இந்தப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி, அவர்களின் ஆதரவுகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் அன்புக்கும் வீடு திரும்பியபின் அன்பை தெரிவிக்க விரும்புகிறேன்

நீங்கள் ஒரு அற்புதமான பார்ட்னராக இருந்ததற்கு சிறந்த நன்றி” என்று மனைவி கம்னாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சுக்லா.

நீங்கள் இல்லை எனில் எதுவும் சாத்தியம் இல்லை என்று கண்ணாடி சுவரின் எதிர்பக்கங்களில் ஒருவருக்கொருவர் விடைகொடுக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருக்கிறார்.

சுபான்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா

சுக்லா- கம்னா

இவர்களின் காதல் கதை பள்ளி பருவத்தில் இருந்து தொடங்கியதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தின் படி, கம்னா ஒரு பல் மருத்துவர், இருவரும் சிறு வயதில் இருந்தே பழகியவர்கள். அவர்களுக்கு தற்போது ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார்.

சுபன்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லாவும், தனது மகன் சுபன்ஷு விண்வெளிக்குச் செல்வதில் மிகுந்த பெருமை கொள்கிறார். மருமகள் கம்னா, மகன் விண்வெளி பயணத்திற்கு மிகுந்த பலமாக இருந்ததாக ஆஷா சுக்லா பாராட்டிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *