• June 26, 2025
  • NewsEditor
  • 0

வேலூரில் ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தார்.

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.197.81 கோடி மதிப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய மருத்துவமனையில் 560 படுக்கைகள், 11 அறுவை சிகிச்சை அரங்குகள் உட்பட உயர்சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 ஆரம்ப, துணை சுகாதார நிலைய கட்டிடங்களையும் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *