• June 25, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

எல்லாவற்றிக்கும் தொடக்கமான என் “அ” மற்றும் “அ” வுக்கு

இதுவரை தங்களுக்கு எந்த பெருமையையும் தப்பி தவறிக்கூட கொடுத்திராத உங்கள் அன்பு மகன் வெளிநாட்டில் இருந்து எழுதிக்கொள்வது,

அதிகமாக பேசிக்கொள்ளாத ஒரு நபரிடம் இருந்து எப்படி பல லட்ச ருபாய் வாங்கிக்கொள்ள முடியும்?!!! இந்த வியப்பே நீங்கள் தான் அப்பா

நீங்கள் என்னை திட்டிய சொற்களை உணர செய்வதற்காகவே  இங்கு நிறைய கம்பெனிகள் பல கோடி ரூபாய் செலவுகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன, என் திமிரை விட உங்கள் அனுபவம் தான் பெரியது என நிரூபித்து, என் supervisor தினமும் உங்களுக்கு சான்றிதழ் வழங்கிக்கொண்டே இருக்கிறார்,

“எப்படியாவது அவன் டிகிரி முடிக்கனும்” என்று நீங்கள் அடிக்கடி யார் யாரிடமோ புலம்பியதின் ஆழம், நான் நீண்ட தூரம் மூழ்கிய பிறகு தான் புரிகின்றது

எப்படி எந்த போட்டியிலுமே வெல்லாத மாணவனுக்கு எல்லா பரிசையும் கொடுக்க முடியும்?!!! அந்த ஆச்சரியமே நீங்கள் தான் அம்மா, எதிலுமே சிறந்து விளங்காதவணை எப்படி உங்களால் மட்டும் எப்போதுமே ஆதரித்து பேசிக் கொண்டே இருக்க முடிகின்றது?

இங்கு என் துணிகளை நானே தான் துவைத்துக்கொள்கிறேன், என் சாப்பாட்டை நானே தான் சமைத்துக்கொள்கிறேன், அப்போ அப்போ கழிவறை சுத்தம் செய்வதும் உண்டுஆனால்  இந்த வேலைகளில் இவ்வளவு நுனுக்கங்கள் உண்டுஇவ்வளவு சலிப்புகள் உண்டு என்று நீங்கள் ஒரு போதும் சொல்லியதே இல்லையே ஏன்?

அம்மா,அப்பா நீங்கள் சரியான ஜோடி பொருத்தம் இல்லை என்று நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன், என் நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் உங்கள் இருவரையும் பார்க்கும் பட்சத்தில் சொல்கிறேன், உங்களுக்குள் ஒற்றுமை,புரிதல் என்பது சிறிதளவும் கிடையாது, அம்மா குடும்பத்திற்காக ஒன்று யோசித்தால் அப்பா அதே விஷயத்தை கண்டிப்பாக நேர் எதிராக தான் யோச்சிப்பார், இதனாலையே உங்கள் இருவருக்கும் சண்டை அதிகமாக வந்துக்கொண்டே இருக்கும், நீங்கள் அன்பாய் பேசிக்கொண்டு கூட நாங்கள் பார்த்ததே இல்லை, 

இப்படி இருந்தும், பிள்ளைகளின் படிப்பு மற்றும் நலன் விஷயங்களில் மட்டும் எப்படி உங்களால் ஒரே மாதிரியாக யோசிக்க முடிகின்றது, பிள்ளைகளால்,பிள்ளைகளுக்காக நீங்கள் சிறந்த ஜோடியாக மாறுவதை நான் பல முறை பார்த்திருகின்றேன்,

அப்பா, நீங்கள் வயலில் அலட்சியமாக நீண்ட விஷ பாம்புகளை பிடித்து விளையாடுவதை பார்த்தும், நிரம்பி வழியும் காவேரி ஆற்று தண்ணிரில் பல அடி உயரத்திற்கு மேல் இருந்து தலைகீழாக பல்டி அடிப்பதை பார்த்தும், நீங்கள் எதற்கும் பயம் கொள்ளாத வீரன் என்றே தவறாக நினைத்திருந்தேன், ஆனால் என்னுடைய வருங்காலத்தை நினைத்து நீங்கள் அடைந்த அலாதி அச்சத்தையும், இவன் எப்படியாவது உருப்பட்டுவிட வேண்டும் என்று நீங்கள் அடைந்த பதற்றத்தையும் உணர்ந்த  பிறகு தான் தெரிந்தது, இந்த உலகத்தின் மிக பெரிய பயந்தாங்கோலியே நீங்கள் தான் என்று. 

அம்மா, இதுவரை என் வாழ்க்கையில் யாரிடம் அதிகமாக கோபப்பட்டிருப்பேன் என கணக்கெடுத்தாள் அதில் முதல் இடத்தில் நீ மட்டும் தான் இருப்பாய்கண்டிப்பாக அதில் முக்கால்வாசி நேரம் நான் தேவை இல்லாமல் தான் கோபித்திருப்பேன் , ஏன் என்றால் தேவை இல்லாமல் வரும் கோபத்தை அதிகமாக உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்டமுடியும்,

ஏனோ ஆண்கள் வெளியே சந்திக்கும் விரக்திகளையும், ஏமாற்றங்களையும் தங்களுக்கே தெரியாமல் வீட்டில் உள்ள பெண்களிடம் தான் வெளிக்காட்டி சிறு இளைப்பாறுதல் பெறுகின்றனர்

அம்மா, நீ மட்டும் ஒரு நாள் வீட்டில் இல்லை என்றால், அஞ்சறப்பெட்டி முதல் ஆட்டுக்குட்டி வரை எல்லாமே அனாதை ஆகிவிடுகின்றன, என்னையும் சேர்த்து தான்

 அப்பா, இப்போது கூட உங்களை அப்பா அப்பா என்று குறிப்பிடும் போது யாரோ  ஒரு புதிய நபரிடம் பேசுகின்ற உணர்வு தான் எனக்கு வருகின்றதுஏன் என்றால்இதுவரை உங்களிடம் நான் பேசிய வார்த்தைகளை மொத்தமாக சேர்த்து பார்த்தாலும் அதை விட இந்த கடிதத்தில் அதிகப்படியான வார்த்தைகள் இருக்கும் என நினைக்கிறேன், நீங்கள் வளர்க்கும் ஆடு மாடுகளிடம் பேசும் அளவிற்கு கூட என்னிடம் பேசியதில்லைஆனால் என்னை பற்றி குறை மட்டும் பேசுவதை பல முறை கேட்டிருகின்றேன்

டாக்டர்  உங்களுக்கு முதுகு தண்டில் பிரச்சனைஇனி நடப்பதே கடினம், சுமைகளும் தூக்க கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்ஆனாலும் இன்னமும் வயல் வெளி வேலைகளை பார்த்துக்கொண்டும், எருவு மூட்டைகளை தனி ஆளாக  தூக்கிகொண்டும் தான் இருக்கிறீர்கள், எப்போதுமே உழைத்துக்கொண்டு மட்டுமே இருக்கும் கடு கடுவென இருக்கமான முகம்ஒரு மனிதன் ஏன் இப்படி இருக்கிறான்எப்படி ஒருமனிதனால் இப்படி இருக்கமுடியும் என பல முறை யோசித்து வியந்திருகின்றேன்,

ஏன் இவ்வளவு வெறி, வைராக்கியம், கோபம்உங்களது சிரிப்பை மறந்த முகத்திற்க்கும், வெயிலில் ஊறிபோன கரும் உடலுக்கும், பல சேற்று வரப்பை முத்தமிட்ட உங்கள் பாதத்திற்கும் பின்னால் இருக்கும் கதையை பாட்டியின் மூலமாகவும்உங்கள்  பழைய நண்பர் மூலையமாகவும் பல முறை கேட்டிருகின்றேன்.

நீங்கள் 5 வயதில் வயிறு சத்தம் போடும் அளவிற்கு பட்டினியாய் சோறு இல்லாமல் அலைந்தது, விவசாயம் செய்ய நிலம் இல்லாமல் சொந்தக்காரர்களிடம் கூலி வேலை செய்து அவமானம் பட்டதுபின் வெறும் பசியுடனும், வைராக்கியத்துடனும் வாழ்க்கை முழுக்க வயலிலும், சேற்றிலும் கிடந்தது, என எல்லாவற்றையும்  கேள்விப் பட்டேன்உங்கள்  அளவில்லா காயங்களுக்கெல்லாம் மருந்தாக சேற்றை பூசிக்கொண்டு வயலிலேயே உழைத்து உழைத்து உயிர்படைந்து உள்ளீர்கள் என தெரிந்துக்கொண்டேன்,

இவை எல்லாம் எங்களுக்காக  நீங்கள் செய்தாலும்எங்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? என எளிமையாக  கேட்கும் அற்ப மனிதர்கள் தான் பிள்ளைகளாகிய நாங்கள்இருந்தும் இதற்கெல்லாம் உங்களது பதில் வலி கலந்த அந்த சிறு புன்னகை மட்டுமே

இடியிலும்,மழையிலும், புயலிலும் வெயிலிலும், பல இராப்பொழுதுகளையும், பகல்ப்பொழுதுகளையும் கடந்து நெற்மணிகளை காத்து வளர்த்தனாலையேஉங்களது பிள்ளைகளை வளர்க்க நேரம் இல்லாமல் போய்விட்டதென நினைக்கிறேன்ஆனாலும் அந்த குறையையும் தீர்த்து வைக்க தான் அம்மா நீங்கள் இருந்தீர்கள்

விரகடுப்பின் கண் எரிச்சல், மாமியார் கொடுமை, மாமனார் மற்றும் புருஷனின் ஆண் ஆதிக்கம், ஆடு மாடுகளின் சாணம், இவற்றிற்க்கு நடுவிலும் எங்களிடம் அன்பை மட்டுமே கொடுத்துவந்தீர்கள் 

அன்பை எல்லோருக்கும் ஊட்டிவிட்டு  பசியாக கிடந்தவள் தான் அம்மா 

அன்பைக் வெளிப்படுத்த தெரியாமலேயே  ஊமையாக கிடப்பவர் தான் அப்பா

ஆனால் இன்னமும் பல வெடிப்புகளுடன் மண்ணை சிராய்த்து ஓடிக் கொண்டே இருக்கும் உங்களது இருவரின் பாதங்களுக்கும் என்னால் ஓய்வு கொடுக்க முடியவில்லை, இதனை நினைத்து தவித்துக்கொண்டிருக்கும் என் மனதின் ஆழத்தில் இருக்கும் வலி உங்களது எல்லா வலிகளை விடவும் பெரிது என எப்படி நான் உங்களுக்கு புரிய வைப்பேன்?

ஆனாலும் பிள்ளைகளுக்காக முழுமையாக நீங்கள் வாழ்ந்ததை போல என்னால் உங்களுக்காக முழுமையாக வாழ முடியாது, ஏன் என்றால் உங்களை போல இயற்கையான தியாக உணர்வு எங்களுக்கு கிடையாதுபிள்ளைகள் நாங்கள் கொஞ்சம் சுயநலம் கலந்த உயிரினங்கள் தான்,

பல காலமாக வெளிப்படுத்தாத அல்லது தவறாக வெளிப்படுத்திய என் உணர்வுகளை இந்த கடிதத்தில் சரியாக உங்களிடம் கொட்டிவிட்டேன் என நம்புகிறேன், ஒரு உணர்வு பூர்வமான கடிதம்இதயத்தை தூய்மையாக்கும் என்பதை உணர்ந்தப்படியும்,  ஒரு நாள் கண்டிப்பாக உங்களை பெருமை அடைய செய்வேன் என்ற நம்பிக்கையிலும் இக்கடிதத்தை முடிக்கிறேன் 

பாவிகளை தூய்மை ஆக்குகின்ற உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் நன்றி!!!

Letter Contest

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *