
சென்னை: சட்டப்பேரவை தேர்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், கட்சி வளர்ச்சி பணிகள், கூட்டணி தொடர்பாக விவாதிக்க ஜூன் 24, 25-ம் தேதிகளில் 42 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.