• June 25, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்: “அதிமுகவின் கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார். 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்” என மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜூலை 6-ம் தேதி மதுரையில், உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் தர வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டுள்ள வகுப்பு திருத்தச் சட்டம் 2025 திரும்பப் பெற வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் பேரணியும், மாநாடும் நடத்த உள்ளோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *