
சென்னை: தமிழகத்துக்கு நடப்பு (2025-26) கல்வியாண்டிலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கான நிதி ரூ.1,800 கோடியை வழங்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையிலான இக்கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.