
சென்னை: “திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் என்னதான் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டாலும், அவதூறுகளை பரப்பினாலும், முருக பக்தர்கள் மாநாட்டை போல, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றே தீரும்.” என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏன்.என்.எஸ் பிசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 22-ம் தேதி, தமிழகத்தின் கலாசார தலைநகரான மதுரையில் நடந்த, 'முருக பக்தர்கள் மாநாடு' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, இதை எப்படியாவது நடத்த விடாமல் தடுத்துவிட வேண்டும் என்று திமுக அரசும், அதன் கூட்டணி கட்சிகளும், அனைத்து வகையிலும் முயற்சித்து வந்தன. காவல்துறை கடுமையான நெருக்கடிகளைத் தந்தது.