
சிம்புவின் 50-வது படம் தாமதமாவதால், மணிகண்டன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் தேசிங்கு பெரியசாமி.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் 50-வது படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இதன் பணிகள் எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இதற்காக நீண்ட வருடங்கள் காத்திருந்தார் தேசிங்கு பெரியசாமி.