
புதுடெல்லி: பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4ன் ஏவுதல் இன்று (ஜூன் 25) திட்டமிடப்பட்டுள்ளது.
புளோரிடாவில் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39ஏ- லிருந்து இன்று இந்திய நேரப்படி நண்பகல் 12.00 மணியளவில் ஆக்சியம்-4 ஏவுதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லவிருக்கும் நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்டில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.