
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, சுமார் ரூ.10 கோடியில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது. கோல்டு (ரூ1,000), டைமண்ட் (ரூ.2,000), பிளாட்டினம் (ரூ.3,000), பிளாட்டினம் பிளஸ் (ரூ.4,000) என நான்கு வகையானபரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழு உடல் பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்திலேயே முதன்முறையாக, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டமும் இங்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், அடுத்த கட்டமாக புற்றுநோய் பாதிப்புகளை அறிவதற்கான பரிசோதனைத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.