• June 25, 2025
  • NewsEditor
  • 0

வந்தே பாரத் – இந்தியாவின் அதிநவீன மற்றும் மிக வேகமாக பயணிக்கும் ரயில் என்று இந்த ரயில் குறித்து மத்திய அரசு பெருமை கொள்கிறது. ஆனால், இந்த ரயில் குறித்தும், அதன் சேவைகள் குறித்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

லேட்டஸ்டாக, வாரணாசி – புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் (ரயில் எண் 22415) திடீரென்று ஏ.சி வழியே, பயணிகள் சீட்டின் மீது தண்ணீர் கொட்டியுள்ளது. இதனால், அந்த சீட்டில் அமர்ந்திருந்த பயணிக்கு மிகவும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. அவரது லக்கேஜுகளும் இந்தத் தண்ணீரால் முழுவதும் நனைந்துள்ளது.

வந்தே பாரத்

‘இலவச நீர்வீழ்ச்சி’ என்ற கேப்ஷனோடு, இதன் வீடியோப் பதிவை இணையத்தில் போஸ்ட் செய்ய, இது மிகவும் வைராலாகி உள்ளது.

இந்தப் பதிவிற்கு உடனடியாக ரயில்வே நிர்வாகம் எதிர்வினையாற்றி, “கோச் C-7-ல், சீட் நம்பர் 76-ல் கூலிங் சிஸ்டமில் தேங்கியிருந்த நீரால், இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தண்ணீர் வடியும் ஓட்டையை பில்டர் மறைத்துவிட்டது. அதனால், ரயிலில் பிரேக் போடப்பட்டப் போது, தண்ணீர் காற்று குழாயின் மூலம் வெளியே கசிந்துள்ளது” என்று காரணம் கூறியுள்ளது.

நீங்கள் வந்தே பாரத்தில் பயணித்திருக்கிறீர்களா? உங்களுடைய பயண அனுபவம் என்ன?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *