• June 25, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகத்​தின்​போது தமிழில் மந்​திரங்​கள் ஓதப்​படும் என்று உயர் நீதி​மன்​றத்தில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்டது. தூத்​துக்​குடி மாவட்​டம் ஆழ்​வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில், ‘திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேகம் ஜூலை 7-ம் தேதி நடை​பெறுகிறது. கும்​பாபிஷேகத்​தின்போது யாக​சாலை, கரு​வறை, கோபுர விமான பூஜை​யில் தமிழில் மந்​திரங்​கள் ஓதுமாறு உத்​தர​விட வேண்​டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​.எம்​. சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரிய கிளாட் அமர்​வில் விசா​ரணைக்கு வந்தது. அரசு தரப்​பில், “யாக​சாலை​யில் மந்​திரங்​கள் ஓது​வது தொடங்கி, திரு​முறை பாடு​வது, திருப்​பு​கழ் பாடு​வது, 64 ஓது​வார்​கள் பூஜை செய்​வது ஆகிய நிகழ்​வு​கள் தமிழ் மொழி​யில் நடை​பெறும்” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *