
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக, அதிரடிப்படையினருடன் எஸ்பி. கோபாலகிருஷ்ணன், மேட்டூரை அடுத்த பாலாறு வனப்பகுதிக்கு 1993-ம் ஆண்டு ஏப். 9-ம் தேதி சென்றார். தங்களுக்கு வழிகாட்டுவதற்காக, இன்ஃபார்மர்களாக மேட்டூர் கிராமங்களைச் சேர்ந்த 16 பேர், தனது உதவியாளர் மேட்டூர் கிளமென்ஸ் உள்ளிட்டோரையும் எஸ்பி. கோபாலகிருஷ்ணன் உடன் அழைத்துச் சென்றார். அதிரடிப்படையினர் சென்ற வேன், பாலாறு அருகே சுரைக்காய் மடுவு என்ற இடத்தில் வீரப்பன் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்துசிதறியது.
இளம் வயதிலேயே கணவரை இழந்தனர்: இதில், போலீஸார், வனத்துறையினர் உள்ளிட்ட 7 பேரும், கிராம மக்களில் 15 பேரும் உடல் சிதறி இறந்தனர். அதே வேனில் பயணித்த எஸ்பி. கோபாலகிருஷ்ணன், அவரது உதவியாளர் கிளமென்ஸ், வழி காட்டியாகச் சென்ற கோவிந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இருசார் ஆகிய 3 பேர்மட்டுமே பலத்த காயங்களுடன் உயிர் தப் பினர். அப்போது, வழிகாட்டியாக சென்று உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. காயமடைந்த கிளமென்ஸ், இருசார் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.