• June 24, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “முருக பக்தர்கள் மாநாட்டின் தீர்மானங்களுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பில்லை,” என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது: “மக்களுக்கு சேவை செய்தவதை விட, மக்களுக்கு பணி செய்வதை விட அதிமுக மீது அவதூறுகளை கூறிவதில்தான் திமுக அதிக நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பும் ராணுவ கட்டுப்பாட்டுடன், இந்தியாவிலேயே எல்லோரும் பாராட்டு வகையில் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி வருகிறார். ஆளும் திமுக அரசு, ஆட்சி நம் கைவிட்டுப் போய்விடும் என்ற அச்சத்தில் எல்லையை மீறி இன்றைக்கு அவதூறுகளை அதிமுக மீது பரப்பி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *