
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’.
ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரித்தது மிகப்பெரிய தவறு எனக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் தயாரிப்பாளர் தில் ராஜூ, “பெரிய இயக்குநர்களுடன் பெரிய படங்களை உருவாக்கும்போது, 100% பிரச்னைகள் எழத்தான் செய்யும்.
எனக்கு மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லோருக்குமே நடக்கத்தான் செய்யும். ‘கேம் சேஞ்சர்’ படத்தின் எடிட்டர் படத்தின் நீளம் ஒரு கட்டத்தில் நான்கரை மணி நேரமாக இருந்ததாகக் கூறியது உண்மைதான்.
இப்படியான விஷயங்கள் பெரிய இயக்குநர்களுடன் பணிபுரியும்போது நிச்சயம் நடக்கும்.

எனது திரைப்பட வாழ்க்கையில், ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களுடன் நான் இதற்கு முன் பணியாற்றியதில்லை. ‘கேம் சேஞ்சர்’ எனது முதல் தவறான முடிவு.
நான் ஒப்பந்தத்தில் எனது கருத்துகளை தெளிவாகக் குறிப்பிட்டு, பின்னர் தயாரிப்புக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. அது எனது தவறு.” எனப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…