
சென்னை: “வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை தமிழக அரசு இயற்றினால் மத்திய அரசும் நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.” என்று பேராசிரியர் ஏழுமலை தெரிவித்தார்.
நம்நாட்டில் வேளாண் பொருட்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், அதற்கான பணிகளை ஆட்சியாளர்கள் முன்னெடுப்பதில்லை. இதற்கிடையே மாம்பழம் உட்பட விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மாநிலம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றை சரிசெய்வதற்கு வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை இயற்ற வேண்டுமென கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன.