• June 24, 2025
  • NewsEditor
  • 0

பாரிஸின் டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கில் 9 வயதான சிறுமியுடன் போலியான திருமணம் நடத்த முயன்றதாகப் பிரிட்டிஷ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை தீம் பார்க்கை திருமணத்திற்காக புக் செய்துள்ளனர். பொதுமக்களுக்காகவும் இந்த தீம் பார்க் திறக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணமகன் உடையில் வந்த ஒருவர் திருமணத்திற்காக இந்த தீம் பார்க்கை முன்பதிவு செய்துள்ளார்.

ஆனால் மணமகள் குழந்தை போன்று இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர்.

Disneyland

இதனையடுத்து அங்கு நடந்த திருமணம் குறித்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரித்ததில், இது உண்மையான திருமணம் இல்லை என்றும் ஒரு போலியான ஏற்பாடு என்றும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாகச் சிறுமியின் தாயார் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மணமகன் என்று கூறப்படும் 22 வயது நபர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர். இந்த நிகழ்வை விளம்பர நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் கூட வாடகைக்கு எடுக்கப்பட்ட நடிகர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது என்றும், உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *