• June 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் AI 171 விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது என்றும், அதில் உள்ள தகவல்களைத் திரட்டுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். அதோடு, விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட விமானத்தில் பயணிக்காத 33 பேர் உயிரிழந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *