
கொடைக்கானல்: கொடைக்கானலில் மழைக்காலத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூலை 1 -ம் தேதி முதல் மண் அள்ளும் இயந்திரம், ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்து கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மண் அள்ளும் இயந்திர (ஜேசிபி) வாகனங்கள், பாறைகளுக்கு வெடி வைப்பது, ஆழ்துளை கிணறு அமைப்பது ஆகியவற்றுக்கு தடை உள்ளது. இருந்தும் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பொருட்களை அகற்றுவதற்கும், விவசாய நிலம் உட்பட பிற வகை நிலங்களை சமன் செய்வதற்காகவும் அனுமதியில்லாமல் மண் அள்ளும் இயந்திரம் (ஜேசிபி) உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.