
சென்னை: தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.டி.வி. நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் கலந்து கொண்டு ஒப்பந்தம் பெற்ற எங்களது நிறுவனம், சமையல் எண்ணெய்யை சப்ளை செய்தது. இந்த வகையில் 141 கோடியே 22 லட்சம் ரூபாய் அரசு எங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. டெண்டர் நிபந்தனைப்படி 30 நாட்களில் இந்த தொகையை வழங்க வேண்டும். எனவே, நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்,” என கூறியிருந்தது.