
அனகாபுத்தூர்: தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் அனகாபுத்தூர் அருகே நேற்று இரவு இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, 8 மாத கர்ப்பிணியான மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், மகாராஜபுரம் 1-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (65). இவர் நேற்று அம்பத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி இந்திராணி ( 51) மற்றும் எட்டு மாத கர்ப்பிணியான மகள் தீபிகா ( 23) ஆகியோருடன் சென்றிருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று இரவு 11 மணி அளவில் மூன்று பேரும் அம்பத்தூரில் இருந்து கால் டாக்ஸி ஒன்றில் சந்தோஷபுரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.