
இந்தியில் ’த்ரிஷ்யம் 3’ குறித்த செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
வரும் அக்டோபரில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதனிடையே, இந்தியில் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு காந்தி ஜெயந்திக்கு வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.