
காட்டாங்கொளத்தூர் தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக உள்ள சென்னை – திருச்சி சாலை, தற்போது நான்குவழி சாலையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனிடையே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழி சாலை 8 வழி சாலையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்ட நிலையில், சிங்கப்பெருமாள் கோவில் முதல் திருச்சி வரை 8 வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்றது வருகின்றன.
இந்நிலையில் நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், சாலை குறுக்கிடும் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து உள்ளனர். இதனை தவிர்க்க சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரை 7 இடங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரூ.20.48 கோடியில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.