
லக்னோ: பள்ளியில் சேர விரும்பிய ஏழைச் சிறுமிக்கு அவர் விரும்பிய பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அவ்வப்போது ஜனதா தர்ஷன் என்ற பெயரில் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில், முதல்வர் யோகியை ஏழைச் சிறுமி வஷி என்பவர் சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்டார்.