• June 24, 2025
  • NewsEditor
  • 0

அகமதாபாத்: ​நான்கு மாநிலங்​களில் 5 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு நடந்த இடைத்​தேர்​தலில், குஜ​ராத்​தில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு தொகு​தி​களை கைப்​பற்​றின. கேரளா, குஜ​ராத், பஞ்​சாப், மேற்​கு​வங்​கம் ஆகிய 4 மாநிலங்​களில் 5 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு கடந்த 19-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. அவற்​றில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்டன.

கேரளா​வில் உள்ள நிலாம்​பூர், குஜ​ராத்​தில் உள்ள விஸ​வாதர் மற்று கடி, பஞ்​சாபில் மேற்கு லூதி​யா​னா, மேற்கு வங்​கத்​தில் காளி​கஞ்ச் ஆகிய 5 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. குஜ​ராத் மாநிலம் விஸ​வாதர் தொகு​தி​யில் ஆம் ஆத்மி எம்​எல்ஏ பூபேந்​திர பயானி, பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு பாஜக.​வில் இணைந்​தார். அதனால் அங்கு இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. அங்கு ஆம் ஆத்மி கட்​சியை சேர்ந்த கோபால் இடா​லியா வெற்றி பெற்​றார். பாஜக வேட்​பாளர் கிரித் படேலை விட கோபால் 17,581 வாக்​கு​கள் அதி​கம் பெற்று வெற்றி பெற்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *