
அகமதாபாத்: நான்கு மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், குஜராத்தில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு தொகுதிகளை கைப்பற்றின. கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அவற்றில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
கேரளாவில் உள்ள நிலாம்பூர், குஜராத்தில் உள்ள விஸவாதர் மற்று கடி, பஞ்சாபில் மேற்கு லூதியானா, மேற்கு வங்கத்தில் காளிகஞ்ச் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலம் விஸவாதர் தொகுதியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பூபேந்திர பயானி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக.வில் இணைந்தார். அதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கோபால் இடாலியா வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் கிரித் படேலை விட கோபால் 17,581 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.