• June 24, 2025
  • NewsEditor
  • 0

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் போர்டோ, நடான் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி உடனடியாக கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.

கத்தார் நாட்டில் கணிசமாக இந்தியர்கள் இருப்பதால், ‘கத்தாரில் உள்ள இந்தியர்கள் வீட்டிற்குள்ளே பத்திரமாக இருக்க வேண்டும்’ என இந்திய தூதரகம் அறிவித்திருக்கிறது.

இப்படியாக கடந்த 12 நாள்கள் தாக்குதல்கள் தீவிரமடைந்த இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “கடந்த 12 நாள்கள் நடைபெற்ற போரில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரு நாடுகளும் தங்களின் உறுதிப்பாடு, தைரியத்தை வெளிப்படுத்தின. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இரு நாடுகளுக்கிடையே போர்நிறுத்தத்தை அறிவிக்கிறேன்” என்று தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இருப்பினும் ட்ரம்ப்பின் இந்த போர் நிறுத்த அறிவிப்பை இருநாடுகளும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் – ஈரான் இருநாடுகளும் எந்தவொரு அறிவிப்பையும் அறிவிக்கவிலை. இருநாடுகளுக்கிடையேயான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

‘இஸ்ரேல் தரப்பில் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடியை கொடுப்போம்’ என்பதே ஈரானின் நிலைப்பாடாக இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *