
கோவை: ‘பாரதம் எப்போதும் அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது’ என, கோவையில் நடந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
கோவை பேரூர் ஆதீனம் மறைந்த ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா, பேரூர் மடத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராகுல்ராஜா வரவேற்றார். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தொடக்க உரையாற்றினார்.