
சென்னை: திமுக ஐடி விங்குக்கு அதிமுக ஐடி விங் தக்க பதிலடி தராததால், அதன்மீது பழனிசாமி அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ஐடி விங் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டத்தை பழனிசாமி கூட்டியுள்ளார்.
‘கீழடி விவகாரத்தில் தமிழக நலன் முக்கியமில்லை, பிரதமர் மோடியின் ஆதரவு போதும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கருதுவது போன்று பொருள்படும் வகையில், திமுக ஐடி விங் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.