
சிவகாசி: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்ததை தவிர்த்து இருக்கலாம், அது வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற்றதுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு. ஆட்சியாளர்கள் அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இந்து மத நம்பிக்கைகள் கொண்டோரை புண்படுத்துவதுதான் திமுகவின் வரலாறு.