• June 23, 2025
  • NewsEditor
  • 0

2027-ம் ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் இடம்பெறுவது கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

14-வது உலகக்கோப்பை 2027-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

சவுரவ் கங்குலி

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற கோலி, ரோஹித் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து கங்குலி பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “அந்த உலகக்கோப்பை நடக்கும்போது விராட் கோலிக்கு 38, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகியிருக்கும்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்ட இருவருக்கும், 2027-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறுவது எளிதான விஷயமாக இருக்காது.

அடுத்த உலகக் கோப்பை வரை இந்தியா, இன்னும் 27 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. அதன்படி பார்த்தால் இருவரும் அடுத்த 2 ஆண்டுகளில் தலா 15 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அற்புதமான கிரிக்கெட் வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விராட் கோலி - ரோஹித்
விராட் கோலி – ரோஹித்

ஆனால், 2027-ம் ஆண்டு வரை அவர்கள் முழுமையான உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அது கடினமான விஷயம். அதற்கேற்ப அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *