
கோவை: “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ வெளியிட்டது எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் கோவை புறப்பட்டுவிட்டேன். அது குறித்து தெரிந்த பின்னர் பதில் அளிக்கிறேன்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மதுரையைில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என திமுக கூறிய நிலையில் முதல் நாள் 3 லட்சம் பேர், மாநாடு தினத்தன்று 5 லட்சம் பேர் மாநாட்டுக்கு வருகை புரிந்தனர். சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் மாநாடு நடந்து முடிந்துள்ளது. அனைவரும் கட்டுப்பாட்டுடன் மாநாட்டில் பங்கேற்றுச் சென்றனர்.