• June 23, 2025
  • NewsEditor
  • 0

கோவை: “உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது,” என கோவையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

கோவை பேரூர் ஆதீனம் மறைந்த ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, பேரூர் மடத்தில் இன்று (ஜூன் 23) நடந்தது. உலக நன்மைக்காக நடத்தப்பட்ட வேள்வியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று, ராமலிங்கேஸ்வரருக்கு புனித நீர் ஊற்றி பூஜை செய்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *