• June 23, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இந்த கடிதம் வந்து சேர்ந்திருக்கும் இந்த நொடி வரை என் மீது உங்களுக்கு அடுக்கடுக்கான புகார்கள் இருக்கும்..நான் பேசியதைத்தான் நீங்கள் இதுவரை காது கொடுத்து கேட்டதில்லை ஆதலால் இதை வாசிப்பவரின் குரலில் என்னையும் என் வலியையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்..

என்னை வளர்த்து ஆளாக்கி படிக்க வைப்பதற்கு நீங்கள் சிரமப்பட்டீர்கள் அதை என்னால் என்றும் மறுக்க முடியாது மறக்க முடியாது.. ஆனால் அது உங்களின் கடமை என்பதை மறந்து விடாதீர்கள்..

நான் ஏதோ குப்பைத் தொட்டியில் கிடந்தவன் அல்ல..அக்கம் பக்கத்தினர் சொல்வதை வைத்து என்னை நீங்களே ஒரு வட்டத்திற்குள் அடைத்து எனக்கு அவப்பெயர்கள் பலவற்றை உண்டுபண்ணினீர்கள் அந்த அசிங்கம் உங்களுக்குமானது தான் என்பதை மறந்து விடாதீர்கள்..என்றாவது ஒருநாள் என்னை அமரவைத்து பொறுமையாக பேசியது உண்டா எனது கருத்தை கேட்டது உண்டா..

சிறுவயது முதலே எனக்கு ஆசைப்பட்டது எதுவும் கிடைத்தது இல்லை நீங்கள் எனக்கு கிடைத்தது போல.. பொறுப்பாக வேலை செய்து வீட்டை கட்டி என் எதிர்காலத்தை தீர்மானிக்க திட்டமிட்டு பயணித்து கொண்டிருக்கும் என்னை எந்த வித பொறுப்புமே இல்லாமல் ஊர் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்ற உங்கள் மூத்த பிள்ளை‌ மற்றும் இளைய பிள்ளைகாக அசிங்கப்படுத்தியதை மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை..

எதையெல்லாம் செய்தால் நான் ஊரை விட்டு காலி செய்வேனோ அதையெல்லாம் செய்தீர்கள் மனசாட்சியே இல்லாமல்.. நானும் வைராக்கியத்தோடு பல வருடங்கள் தாக்கு பிடித்து விட்டேன்.. அலுவல் சூழலால் உங்கள் வேண்டுதல்படியே இன்று பல மைல் கடந்து உள்ளேன். நான் இல்லாதது உங்களுக்கு நிச்சயம் மகிழ்வை உண்டு பண்ணும் என்றே நம்புகிறேன்..

இனி நீங்கள் என்னைப்பற்றி தாராளமாக புகார்களை எந்தவித தயக்கமும் இன்றி அடுக்கலாம்.. நான் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வேன் என்ற சப்பைக்கட்டு கட்டி நம் உறவினர்களிடம் நல்ல பெயரை வாங்கிக் கொண்டு உள்ளீர்கள்..

பொறுப்பானவனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் துளியும் உங்களிடம் கிடைக்கவில்லை.. ஒருவேளை நானும் பொறுப்பில்லாமல் ஊர்சுற்றி இருந்தால் கிடைத்திருக்குமோ என்று பலசமயங்கள் என்னை மடைமாற்றியது உண்டு…ஆனால் இளைய தலைமுறையை மாற்றும் பொறுப்பு என்னிடம் உள்ளது ஒருபோதும் பொறுப்பற்றவனாய் இருக்க மாட்டேன்..

அனைத்து குழந்தைகளையும் சரிசமமாகத்தான் பார்ப்பார்கள் பெற்றோர்கள் என்பார்கள் ஆனால் நீங்கள் அப்படி இல்லை..

புகழ்ச்சியின் பிடியிலும் வஞ்சகத்தின் பிடியிலும் அறியாமையிலும் உள்ளீர்கள் ஒரு நாள் தெளிவு பெறுவீர்கள் அன்று உங்களை ஏற்கும் மனப்பாங்கில் இருக்க மாட்டேன்..இரக்கமில்லா பெற்றோர்களும் இங்கு உண்டு என்பதை என் உறக்கமில்லா பல இரவுகள் உரக்கச் சொல்லிக் கொண்டே உள்ளன.. அனாதை ஆசிரமங்களில் கூட ஆதரவு இருக்கும் ஆனால் அந்த வீட்டில் எனக்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை.. இருக்கின்ற உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழுங்கள்..

வருத்தங்களோடும் வலிகளோடும் உங்களுக்கு வேண்டப்படாதவன்.

ராபின்மணி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *