
சென்னை: “சென்னையில் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டு பவன் கல்யாண் வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு அவர் என்ன பேசினாலும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சவால் விடுத்துள்ளார்.
மதுரையில் நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரை பற்றியும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வசை பாடி உள்ளார். இந்நிலையில், அவர் அழைக்கிற மேடையில் அதிமுகவினர் போய் அமர்கிறார்கள் என்றால், அந்த இயக்கத்தை அடிமை சாசனத்துக்கு எழுதி விட்டார்கள் என்றுதான் அர்த்தம்.