
புதுடெல்லி: குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல் என்பது 2027 சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி என தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், பொதுத் தேர்தலில் பாஜக – ஆம் ஆத்மி கட்சி இடையேதான் போட்டி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ், டிஎம்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.