• June 23, 2025
  • NewsEditor
  • 0

விமான பயணத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே செல்லவேண்டும் என்று சொல்வார்கள். பஸ், ரயில் போன்று விமான பயணத்திற்கு தாமதமாக செல்ல முடியாது. ஒருமுறை கேட் மூடப்பட்டுவிட்டால் அதன் பிறகு விமானத்தில் பயணிகளை அனுமதிக்க மாட்டார்கள்.

மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவர் தாமதமாக வந்துவிட்டு விமானத்தை தவறவிட்டுவிட்டார். மும்பை கலம்பொலியை சேர்ந்த பியூஸ் சோனி(25) என்ற அந்த பயணி பாட்னா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அவர் வருவதற்கு முன்பே விமானம் புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.

அவர் விமான நிலையத்திற்குள் செல்லும் நுழைவு வாயிலுக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் விமானம் கிளம்பி விட்டது என்று சொன்னார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த சோனி என்ன செய்வது என்று தெரியாமல் கேட் நம்பர் 42 மற்றும் 43-க்கு இடையில் இருந்த வழி வழியாக விமான நிலைய ஓடுபாதைக்குள் சென்றுவிட்டார்.

அவர் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு விமானத்தை நோக்கி ஓடினார். தான் செல்ல வேண்டிய விமானம் அதுதான் என்று நினைத்து அதில் ஓடிச்சென்று ஏறிவிடலாம் என நினைத்து விமானத்தை நோக்கி ஓடினார்.

ஓடுதளத்தில் மர்ம நபர் ஒருவர் ஓடுவதை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உடனே அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, “தான் தாமதமாக வந்ததால் கேட் மூடப்பட்டுவிட்டதாகவும், எனவே அவசர வழியை திறந்து உள்ளே ஓடி வந்ததாக குறிப்பிட்டார்.

அவர் ஓடுபாதையில் ஓடும்போது ஏதாவது விமானம் கிளம்பியிருந்தால் அவர் மீது மோதி அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்று எச்சரித்த அதிகாரிகள், இச்சம்பவத்தால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, அவரை போலீஸில் ஒப்படைத்தனர். போலீசார், அவர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *